கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல மேடை நாடகங்களிலும் வீதி நாடகங்களிலும் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக கோலோச்சினார்.
சமீபத்தில் கூட “ஒட்ட ஓட்டு முத்தையா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கவுண்டமணி தான் நடிக்கும் காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு ஒவ்வொரு காட்சிக்கும் சக நடிகர்களுடன் ரிகர்சல் பார்ப்பாராம். அந்த ஒத்திகையில் என்ன வசனம் பேசப்பட்டதோ அதே வசனத்தைதான் Take எடுக்கையிலும் பேசவேண்டுமாம். சக நடிகர் ஒரு வார்த்தை அதிகமாக பேசினால் கூட “நீ ஒத்திகை பார்க்கும்போது இந்த டயலாக் எல்லாம் பேசலையே. ஏன் இப்படி எக்ஸ்ட்ராவா டயலாக் சேர்க்குற. வேணாம், என்ன வசனம் ஒத்திகை அப்போ பேசுனியோ அதை மட்டும் பேசு” என்று அங்கேயே கடிந்துகொள்வாராம். இவ்வாறு கவுண்டமணி மிகவும் கறாராக இருப்பார் என பயில்வான் ரங்கநாதன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.