தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!
Author: Selvan20 March 2025, 9:02 pm
தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.
இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!
வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அதிகம் ஆகாதே,காக்க காக்க படத்தின் என்னை கண்டால் போன்ற பாடல்கள் அவரது மெலோடி திறமையின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இன்றளவும் இருக்கின்றன.காதலர்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இவரது பாடல்கள்,ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தன.
உலகளாவிய அளவில் புகழ்பெற்ற இவர்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது,பிலிம்பேர் விருது,மிர்சி இசை விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.அவரது இசை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகிற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்,அதாவது மனிதர்களுக்கு மிகவும் மோசமான பழக்கம் கடன் வாங்குவது என்று கூறிய அவர்,வாழ்க்கையில் நிம்மதி பெற கடன் தவிர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
கடன் வாழ்க்கையை மட்டுமின்றி,ஒரு முழு குடும்பத்தையே பாதிக்கக்கூடியது என்பதால்,அது மிகுந்த கவனத்துடன் ஏற்க வேண்டும் என்ற அறிவுரையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.