பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அட்லீ கடைசியாக பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து அட்லீ யாரை வைத்து படம் இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் கமல் ஹாசனை தான் அடுத்து இயக்க உள்ளாராம். அவருடன் சேர்ந்து ஷாருக்கானும் நடிக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. ஹேராம் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ, விஜய் குறித்தும் அவருடனான திரைப்பயணம் குறித்தும் பேசினார். அப்போது ” நான் ராஜா ராணி படத்தை இயக்கி முடித்ததும் விஜய் அண்ணன் அவராகவே என்னை அழைத்து நம்ம ஒரு படம் பண்ணலாம் என வாய்ப்பு கொடுத்தார். மேலும் என்னுடைய வேலையை பாராட்டி என்னை ஒரு இயக்குனராக முதலில் மதித்தது விஜய் அண்ணன் மட்டும் தான் என பெருமிதத்தோடு பேசினார் அட்லீ.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.