தமிழ் சினிமாவில் கடுமையாக உழைத்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர்களின் பட்டியல் ஏராளம் உண்டு.
அதில் மிக முக்கியமாவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். சின்ன சின்ன ரோல்களில் நடித்து பின்னர் ஹீரோ ஆனார். ஹீரோ ரோல் மட்டும் இல்லை எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பேன் என சொல்லி அடிக்கும் விஜய் சேதுபதி, வில்லன் ரோலில் மிரட்டினார்.
இப்படியிருக்கையில், விஜய் சேதுபதி மகனான சூர்யா சேதுபதி, ஹீரோவாக களமிறங்குகிறார். ஏற்கனவே நானும் ரவுடி தான் படத்தில் ஒரு சீனில் நடித்த அவர், சிந்துபாத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்,.
தற்போது ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பூஜையின் போது உங்க தந்தை வரவில்லையா என சூர்யாவிடம் கேட்ட போது, அப்பா வேற நான் வேற… இது என்னோட படம், அதனால்தான் என் பேருக்கு பின்னாடி சேதுபதியை சேர்க்கவில்லை என கூறினார்.
அதே சமயம் படத்தோட டீசர் வெளியீட்டின் போது விஜய் சேதுபதி வந்திருந்தார். இது குறித்து அப்போது சூர்யாவிடம் கேட்ட போது இன்று தந்தையர் தினம் என்பதால் அழைத்து வந்தேன் என கூறி சமாளித்தார்.
பையன் சின்னவனா இருந்தாலும் ஓவர் பேச்சு என நெட்டிசன்கள் விமர்சித்தனர். டீசர் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜய் சேதுபதி மகன்.. சமீபத்தில் பேசிய அவர், டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம், நடிகர் மகன் நடிகர் ஆகக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சூர்யா சேதுபதி பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். நெப்போட்டிசத்துக்கு ஆதரவாக இவரின் கருத்து உள்ளதாகவும், டாக்டர் மகன் டாக்டர் ஆவது கூட ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, நடிகர் மகன் நடிகர் ஆவது ரொம்ப சுலபம்.. பையனுக்கு ஓவர் வாய் துடுக்கு.. இஷ்டத்துக்கு பேசுறாரே என கழுவி ஊற்றி வருகின்றனர்.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.