உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
குழந்தை பருவத்தில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசன் இன்று உலக நாயகனாக பெயரெடுத்துள்ளார். 69 வயசிலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக டாப் இடத்திலே இருந்து வருகிறார். திரைப்படம், அரசியல், தொகுப்பாளர் என துறைகளில் பிசியாக இருந்து வருகிறார்.
முன்னதாக தன் படங்களில் ஒரு ஹீரோயினாக நடிக்க புதுமுகங்கள் மற்ற மொழி நடிகைகளுக்கு கமல்ஹாசன் பெரும் வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அதன்படி, பின்னணி பாடகியாக வேண்டும் என்ற ஆசையில், வந்து பின்னர் ஹீரோயினாக நடித்தவர் தான் வசுந்தராஸ். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் படத்தில் சகலக பேபி பாடலை பாடி சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின்னர், கமலுடன் ஹேராம் படத்தில் இந்த நடிகை தான் வேண்டும் என்று கமல் அடம் பிடித்ததாக நடிக்க வைத்தாக ஒரு தகவல் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, பின்னணி படாகியாக இருந்தவரை ஹீரோயின் ஆக்கி அழகு பார்த்தவர் கமல். இதன் பின்னர், வசுந்தரா தாஸ் நடிகர் அஜித்குமாரின் சிட்டிசன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த இரு படங்களை தொடர்ந்து ஹிந்தி மலையாள மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. ஒரு சில படத்தில் மட்டும் அவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு பின்னணி பாடகியாக மட்டும் உலா வந்தார். அவர், பாடிய பல பாடல்கள் இன்றுவரை ஹிட் ஆகி அனைவரையும் ரசிக்க வைக்கும் வண்ணம் இருக்கும். பின்னணி பாடகியாக 2012 ஆம் ஆண்டு வரை இருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.