மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க: உயிர் பிரியும் தருவாயில் செய்த சத்தியம்.. இன்று வரை கடைபிடிக்கும் DD..!
அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ் நடித்து இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே, பொது இடங்களுக்கும், கடை திறப்பு விழாக்களுக்கும் வரும்போது தான் அணிந்து வரும் உடையை பார்த்து உருவ கேலி செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ்.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்..!
எந்த உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்றும், எடை கூடிவிட்டால் கேலி செய்கிறார்கள் எனவும், இது அதிகம் தன்னை வேதனைப்படுத்துகிறது எனவும் திறமையை மட்டும் பாருங்கள் என ஹனி ரோஸ் கூறி இருக்கிறார்.
இதனிடையே, ஹனி ரோஸ் தன்னுடைய திருமணம் மற்றும் குடும்பத்தை குறித்து பேசி உள்ளார். அதில் அவர், தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை தேவை என்று நடிகை ஹனி ரோஸ் கூறி இருந்தார்.
பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நடிகை ஹனி ரோஸ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த ஹனி ரோஸ் இப்போது, பேரழகியாக மாறி இருக்கிறார். சில நடிகைகள் தங்கள் உடம்பை ஒர்க்கவுட் செய்து பிட்டாக மாற்றி இருக்கின்றனர். ஆனால், ஹனி ரோஸ் உடல் அமைப்பை பெரிதாக வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சிலர் ஊசி போட்டு தனது உடம்பை பெரிதாக்கினார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். இதற்கு பதில் அளித்தவர் அவர் பட வாய்ப்புகள் இல்லாமல் பருமன் ஆகிவிட்டார் என்று விளக்கம் கொடுத்தார். மேலும், கேரளா கடை திறப்பு நிகழ்ச்சிகளில் ஹனி ரோஸ் தான் அதிகம் அழைத்து வருகின்றனர். அவர் வந்தால் கூட்டம் அதிகம் ஆகிவிடுகிறது. அதற்காக, ஒரு கோடி முதல் 2 கோடி வரை அதற்காக வசூல் செய்வதாக செய்யாறு பாலு தெரிவித்திருந்தார். மேலும், மற்ற மாநிலங்களுக்கு அதைவிட அதிகமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.