‘என்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கொடுப்பேன்’… வீட்டில் வேலை செய்த இளைஞருக்கு மிரட்டல் விடுத்த பிரபல நடிகை..?

பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தேனாம்பேட்டை போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல்ஹாசனின் உத்தம வில்லன், பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக, உதயநிதி ஸ்டாலின் உடன் நிமிர், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பார்வதி.

வளர்ந்து வரும் நடிகையான இவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த மாதம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் இருந்து விலையுயர்ந்த கடிகாரங்கள், ஐபோன் மற்றும் லேப்டாப் என 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இவற்றையெல்லாம் தன்வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்கிற இளைஞன் தான் திருடிவிட்டதாகவும் பார்வதி நாயர் கூறி இருந்தார்.

இந்நிலையில், தன் மீது திருட்டு புகார் அளித்த பார்வதி நாயர் மீது சுபாஷ் சந்திர போஸ் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பார்வதி நாயர் போதை பார்ட்டி கொடுத்ததாகவும், ஆண் நண்பர்களுடன் அவர் தனி அறையில் இருந்ததை நான் பார்த்துவிட்டதால் என்மீது அவருக்கு கோபம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் தான் என்னை அநாகரிகமாக நடத்தி வந்தார்.

என்னை அடிச்சு துன்புறுத்தி, என்மீது எச்சில் துப்பி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். என்மீதான திருட்டு புகாருக்கு மறுப்பு தெரிவித்து நான் புகார் அளித்ததை அறிந்ததும், ‘நீ என் மீதே புகார் கொடுக்குறியா… நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக நான் உன்மீது புகார் கொடுப்பேன்’ என்று என்னை அழைத்து மிரட்டினார்.

நான் எதையும் அவரது வீட்டில் இருந்து திருடவில்லை. அவர் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Poorni

Recent Posts

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…

16 minutes ago

பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…

தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…

32 minutes ago

ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…

43 minutes ago

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

1 hour ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

2 hours ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

2 hours ago

This website uses cookies.