வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா தற்ப்போது ” அன்னபூரணி ” என்ற படத்தில் நடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ள படம், ‘அன்னபூரணி’.
இப்படத்தில் நயன்தாரா தனது கனவு லட்சியமான “செஃப் ” ஆசையை பல தடைகளை தகர்த்தெறிந்து ஜெயித்து காட்டுகிறார். இதில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியது.
அதில் ‘புடிச்சத பண்ணா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார்’ ஆகலாம் என நயன்தாரா நம்பிக்கையுடன் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக ராஜா ராணி படத்திற்கு பிறகு இதில் நயன்தாரா – ஜெய் ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.