கனகாவின் சோக வாழ்வு… வெந்து வேகாத அரிசி.. சொந்த வீட்டிலே சிறைவாசம்..!
Author: Vignesh29 May 2023, 12:14 pm
நடிகை கனகா கரகட்டக்காரன் படத்தின் மூலமாக பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவரது தாய் இறந்த பின்னர் எப்படி நிலைகுலைந்து போனார் என்பது பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது பேசி உள்ளார்.
செய்யாறு பாலு பேசும் போது, “கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் கனகாவிற்கு நாலாபுறமும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், கனகாவை அவரது அம்மா தேவிகா தான் அரண் போல இருந்து பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென்று கனனாவின் அம்மா ஒரு நாள் இறந்து போனதாகவும், கனகாவிற்கு அம்மா தான் பக்கபலமாக எல்லாமே. தேவிகாவின் மரணம் கனகாவை நிலைகுலைய செய்து விட்டதாகவும், கமிட் பண்ண படங்களுக்கு அவரால் சரியாக செல்ல முடியவில்லை என்றும், எந்த விஷயத்திலும் கனகாவால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. வீட்டிலேயே கனகா முடங்கி விட்டதாகவும், மீண்டும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கனகாவிற்கு வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைக்கிறார்கள்.

இருப்பினும் தாயாரின் நினைவிலிருந்து கனகாவால் மீண்டு வர முடியவில்லை என்பதால், திடீரென்று கனகா ஒரு நாள் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தன்னுடைய கணவர் பெயர் புருஷோத்தமன் என்றும் அவர் நியூயார்க்கில் இருப்பதாகவும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடனே பத்திரிகையாளர்கள் கணவரின் புகைப்படத்தை கேட்ட நிலையில், புகைப்படம் தர முடியாது என்று கனகா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கனகா கூறியது முற்றிலும் பொய் என்பது தெரிய வந்தது. கனகா ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றும், தன்னை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதற்காக அவர் அப்படி சொன்னாரா? இல்லை தன் பாதுகாப்பிற்காக ஒரு ஆள் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை என பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
மேலும், கனகாவின் வீட்டில் சொத்து தகராறு என்றும் கனகா வீட்டின் ஒரு பகுதி எரிந்து விட்டதாகவும் செய்தி வெளிய சமயத்தில், இதை தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அங்கு சென்ற போது, அவரது வீட்டில் உள்ளே சென்று பார்த்த பொழுது வெந்து வேகாத அரிசி என வீடே அலங்கோலமாக கிடந்தது என்றும், அப்போது கோபமடைந்த கனகா உங்களை யார் இங்கெல்லாம் வரச் சொன்னது என்று கடிந்து கொண்டாராம்.
இதனிடையே, தேவிகா உதவிய தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய மகனை கனகாவுக்கு உதவியாளராக அனுப்பி வைத்ததாகவும், அவர் கனகாவுக்கு எல்லாமுமாய் இருந்து கிட்டத்தட்ட பழைய கனகாவை மீண்டும் கொண்டு வருவதற்கு அவர் முயற்சி செய்த நிலையில் தான் கனகாவின் மீது உதவியாளருக்கு காதல் முளைத்தது.
இதனிடையே, கனகாவிற்கு உதவியாளர் தன்னை தவறாக நடத்த முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகத்தில், அவரை அழைத்து கண்டித்ததோடு, காவல் நிலையத்தில் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டினார். இந்த நிலையில் அந்த உதவியாளர் கனகாவிடமிருந்து சென்று விட்டார். சில காலங்களுக்கு பிறகு அந்த உதவியாளர் தன்னை உண்மையாக காதலித்ததை கனகா புரிந்து கொண்டார். அம்மாவின் இறப்போடு, இந்த குற்ற உணர்வும் கனகாவை மிகவும் பாதித்து மீண்டும் நிலைகுலைந்து போனார். மீண்டும் வீட்டுக்குள்ளேயே தன்னை சிறை வைத்து இருந்து கொண்டார்.” என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலுதெரிவித்துள்ளார்.