சினிமா / TV

படப்பிடிப்பில் இயக்குனர் என்னை நடத்திய விதம் பிடிக்கவில்லை..!மனம் திறந்த சாய் பல்லவி..!

NGK இயக்குனர் பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை சாய் பல்லவி.

சாய் பல்லவி நடிப்பில் வெளி வந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கோடிகளில் புரள்கிறது.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சாய் பல்லவி நடித்திருந்தார். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் மக்கள் சாய் பல்லவியை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: மீண்டும் இணைகிறார்களா பிரபல காதல் ஜோடி…அமரன் படம் கொடுத்த வாய்ப்பு…!

சமீபத்தில் சாய் பல்லவி பேட்டி ஒன்றில் NGK படப்பிடிப்பின் நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் NGK. இத்திரைப்படத்தில் தான் செல்வராகவன் முதன் முதலில் சூர்யாவுடன் இணைந்து பணிபுரிந்தார். படத்தின் ஹீரோயினி ஆக சாய் பல்லவி நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் நடித்த போது எனக்கு அருவருப்பான மனநிலை இருந்தது என்றும் படத்தை விட்டு விலகி விடலாம் என்றெல்லாம் தோன்றியது என கூறியிருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கும் போது இயக்குனர்கள் நிறை குறைகளை சொல்லுவார்கள் அல்லது பாராட்டுவார்கள். ஆனால் இயக்குனர் செல்வராகவன் காட்சி முடிந்த பிறகு எந்த வித பதிலும் சொல்லாமல் கிளம்பி விடுவார்.


படப்பிடிப்பை விட்டு கிளம்பி சென்றுவிடலாம் என்று ஒரு நாள் நினைக்கும் போது நடிகர் தனுஷ் படப்பிடிப்பு எப்படி போது என்று கேட்டார். அவரிடம் என்னுடைய மனநிலையை எடுத்து சொன்னேன்.

அதற்கு தனுஷ் என் அண்ணன் எப்போதுமே அப்படி தான் அவர் நாம் நன்றாக நடிக்கிறோமா இல்லையா என்று உன்னிப்பாக கவனிப்பார். நீங்கள் எதையும் பொருட்படுத்தாமல் நன்றாக நடியுங்கள் என ஆறுதல் சொன்னார்.


நடிகர் சூர்யாவும் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.
அதனால் தான் என்னால் NGK படத்தில் முழுமையாக நடிக்க முடிந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.