இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் . மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.
இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் இப்படி நாளுக்கு நாள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் பணத்தின் தேவை குறித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பணத்தை பொருத்தவரை நான் சிறுவயதிலிருந்து நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன் .
என்னுடைய அப்பா சம்பாதித்த பணத்தை கட்டு கட்டாக கொண்டு வந்து கொடுப்பார். அதனால் நான் நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு பணத்தின் மீது அவ்வளவு ஈடுபாடு கிடையாது. பணம் இல்லை என்று வருத்தப்பட மாட்டேன். பணம் இல்லை அவ்வளவுதானே கை கால் இருக்கு நல்ல திறமை இருக்கு என்று நான் நினைப்பேன்.
இதையும் படியுங்கள்: பூக்கள் பூக்கும் தருணம் பாடல் இப்படி தான் உருவாச்சு… Live’அ மியூசிக் போட்ட GV!
மக்கள் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்காங்க அதுக்கு எவ்ளோ கோடி கொடுத்தாலும் ஈடாகாது என ஜெயம் ரவி உருக்கமாக பேசியிருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு அவர் பேசியிருக்கும் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக அவருக்கு பலரும் ஆறுதலையும் கூறி வருகிறார்கள்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.