இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2025, 5:50 pm
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை கூட நடிக்க வைத்துவிடுவார்.
இவர் படங்களில் நடிக்க ஏராளமான நடிகர், நடிகைகள் வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படி வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த ஒரு இளம் நடிகர்தான் அஜ்மல் கான்.
இதையும் படியுங்க: பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!
2012ல் சாட்டை படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் யுவன் என்ற அஜ்மல் கான், தொடர்ந்து கீப்புள்ள, கமர்கட்டு போன்ற படங்களில் நடித்தார். தொழிலதிபரின் மகனான யுவன், ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு காணாணமல் போனவர்.
இந்த நிலையில் அவரின் அண்மை பேட்டி ஒன்று பேசுபொருளாகியுள்ளது. அவர் கூறியதாவது, இதுவரைக்கு நான் 13 படங்களில் நடித்துள்ளேன், ஆனால் என்னை யாரும் கண்டுக்கவே இல்லை.
லக் இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்பதை பின்பு தான் உணர்ந்தேன், ஆனல் நான நடித்து முடித்த படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
எனக்கு இயக்குநர் பாலா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. சாட்டை படத்திற்கு பிறகு, ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் கேரக்டரை சொன்னதும், நாக்பூர் சென்று பரோட்டா போட கற்றுக்கொண்டேன்.
உடலை பருமனாக்கி தாடி வளர்த்தேன். மிகவும் மெனக்கெட்டு என்னை மெருகேற்றினேன். இயக்குநர் பாலா என்னுடைய போட்டோக்களை எடுத்து பிரமோஷனுக்கு வேண்டும் என கூறினார்.
ஆனால் அதற்கு பின் அந்த படம் டிராப்பானது. நான் ரொம்ப எதிர்பார்த்த ஒரு படம், இப்ப வரைக்கும் அது ஏன் டிராப் என்ற விஷயமே எனக்கு தெரியல. இதனால தான் நான் சினிமாவை விட்டு ஒதுங்கினேன் என பரபரப்பாக பேசியுள்ளார்,.