நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். வாடகைத் தாய் முறை குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் எனும் அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருந்த அவர், சமீபத்தில் மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏறியபடி யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவுக்கு பின்னர் நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிவந்த செய்திகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறி சமீபத்திய நேர்காணலில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது : “இந்த காலகட்டத்தில் என்னுடைய சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருந்தன. ஆனால் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்துவிட்டேன் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
ஆனால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் என்னுடைய உடல்நிலை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. நான் இன்னும் சாகவில்லை. அதுபோன்ற செய்திகள் தேவையற்றது” என தன்னைப்பற்றிய நெகடிவிட்டி குறித்து பேசி அந்த நேர்காணலில் சமந்தா கண்கலங்கியதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.