இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்து அந்த உச்ச அந்தஸ்தில் இருந்து வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான அவர், மூன்று ஃபிலிம்பேர் பரிந்துரைகளுடன் கூடுதலாக நான்கு ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் நான்கு ஜீ சினி விருதுகள் உட்பட பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
கத்ரீனா கைஃப்பின் அழகு மற்றும் நடிப்புக்கான வரவேற்பு வேறுபட்டிருந்தாலும், அவர் தனது அதிரடித் திரைப்படப் பாத்திரங்களுக்காகவும், பல்வேறு வெற்றிகரமான அவரது நடனத் திறனுக்காகவும் கோடிக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது தமிழ் நடிகர் விஜய் சேதுபதியுடன் merry christmas என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீராம் ராகவண் இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தை ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கத்ரீனா கைஃப் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் குறித்து தொகுப்பாளர் கேட்டதும், “தளபதியை தானே சொல்றீங்க…? அவரு தளபதி விஜய்” என க்யூட்டாக கூறினார். தொடர்ந்து பேசிய கத்ரீனா கைஃப்… நான் விஜய்யுடன் கோக்கோ கோலா விளம்பரத்தில் நடித்துள்ளேன். அப்போது விஜய்யுடன் ஈடுகொடுத்து டான்ஸ் ஆட ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அவர் டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அன்று முதல் நான் விஜய்யின் ரசிகையாகவே மாறிவிட்டேன் என மிகுந்த மகிழ்ச்சியோடு பேசினார்.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் அமீர் கான். தற்போது ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து…
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என எடப்பாடி பழனிசாமி…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான…
சென்னையில், இன்று (மார்ச் 14) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 110 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 230…
டாஸ்மாக் ஊழலை மறைப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு, தொகுதி மறுசீரமைப்பு, ரூபாய் இலச்சினை மாற்றுவது என கண்ணாமூச்சி ஆடிவருகிறது என அண்ணாமலை…
Grok AI தனி செயலியாக அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது X தளத்திலும் தனி ஐகானாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பயனர்களை…
This website uses cookies.