7 முறை கருக்கலைப்பு.. என் உயிருக்கு ஆபத்து.. சீமானை சும்மா விடாதீங்க கதறிய விஜயலட்சுமி..!

நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து பிரபலமானார். இவர் கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல கன்னட நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்து டேட்டிங் செய்துவந்தார். அவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட விஜயலக்ஷ்மி 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிட்டது.

இதையடுத்து கடந்த சில வருடங்களாக விஜயலட்சுமி சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரம் ஒரு முடிவில்லாமல் செல்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயலக்ஷ்மி, சீமான் தன்னை திருமணம், செய்துவிட்டு ஏமாற்றியதாகவும். இதை வெளியில் சொல்லியதால் அவரது ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறினார். இதனால் விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையை பின்பற்றுவதாலும், கிறிஸ்துவர் என்பதாலும் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்று சீமான் அப்போது தெரிவித்தார். சென்னையில் பிரபாகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சீமான் தெரிவித்தார்.

நான் மனைவி, கயல்விழியை துணைவி என்று சீமான் கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து, எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, இப்போது இங்கே வந்து நிற்கிறேன் எனக் கூறிய நடிகை விஜயலட்சுமி பேசுகையில்‌, “என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல்‌ விடமாட்டேன்‌. சீமானை கைது செய்யும்வரை போராட்டம்‌ தொடரும்‌” எனத்‌ தெரிவித்தார்‌.

எனக்கு தெரியாமல் 7 முறை கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர் சீமான். என் அனுமதியில்லாமல் கருவை சிதைத்தவர். என்னை தற்கொலைக்குத் தூண்டியவர். மதுரை செல்வம் என்னை பற்றி இழிவாக, தவறாக பல செய்திகளைப் பரப்புகிறார். மதுரை செல்வத்தால் என் உயிருக்கு ஆபத்து. எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். சீமான் இரக்கமற்ற மனிதர். அவருடைய மனைவியான என்னையே மோசமான நபராக சித்தரிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பத்திரிகையாளரின் கேள்விகளால் கடுப்பான விஜயலக்ஷ்மி, சீமான் கேவலமானவர் தான்.. நான் கை பிடித்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு… படுத்ததற்கு Proof இருக்கானு கேப்பாரு…. நீங்க கேட்காதிங்க, என அவர் கூறிய போது, யாரும் அப்படி கேட்கவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறிய பதிலுக்கு, “நீ வாயை மூடுடா… நீ ஏன்டா பேசுற… பேசாதடா,” என ஒருமையில் பேசி திட்டினார் நடிகை விஜயலட்சுமி.

Poorni

Recent Posts

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

1 hour ago

அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!

புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…

1 hour ago

யார் அந்த ரம்யா… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை வறுத்தெடுக்கும். நெட்டிசன்கள்.!

ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…

2 hours ago

அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!

விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…

17 hours ago

துறவி பாதையை கையில் எடுத்த தமன்னா… மகா கும்பமேளாவில் நடந்த ட்விஸ்ட்.!

கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…

18 hours ago

அடிச்சு தூக்கு மாமே…’குட் பேட் அக்லி’ வைப் ஸ்டார்ட்..!

அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…

19 hours ago

This website uses cookies.