ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்கள் பல பின்னணியில் ஒலித்தன. அதில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “இளமை இதோ இதோ” ஆகிய பாடல்களும் இடம்பிடித்திருந்தன.
இந்த நிலையில்தான் தன்னுடைய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இச்செய்தியால் இளையராஜாவை அஜித் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், ஒரு விழாவில் பேசியபோது, “எனது அண்ணனின் பாடலுக்குதானே கைத்தட்டுகிறார்கள். அப்படி என்றால் அவருக்குரிய உரிமையை கேட்பதில் என்ன தவறு?” என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கெத்து தினேஷ், “இசையமைப்பாளரை நாம் எப்போதும் கௌரவிக்க வேண்டும். ராஜா சார் கேட்பது தார்மீகமான தர்மமான ஒரு விஷயம்தான். அவர் கேட்காமலே நாம் தரவேண்டும். அவர் கேட்கிற மாதிரி நாம் வைத்துக்கொள்ளக்கூடாது” என கூறினார். கெத்து தினேஷ் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
This website uses cookies.