தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக திகழ்பவர் இசையானி இளையராஜா.தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையில் புது புது நுட்பங்களை கொண்டு வந்து ரசிகர்களை தன்னுடைய இசையால் மயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் மற்ற கலைஞர்கள் இளையராஜாவிடம் இருந்து பாராட்டை பெற தவமாய் தவமிருக்கும் காலகட்டத்தில்,தற்போது அவரே ஒரு பிரபல பாடகரை புகழ்ந்து தன்னுடைய டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: சீரியல் நடிகை TO சொகுசு கப்பல் உரிமையாளர்…கோடிகளில் மிதக்கும் ஆல்யா மானசா..!
பிரபல கர்நாடக இசை பாடகரான சஞ்சய் சுப்ரமண்யன் நேற்று சென்னையில் “தமிழும் நானும்” என்ற இசை நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி அங்கே இருக்கக்கூடிய ரசிகர்களை பரவசப்படுத்தினார்.அதிலும் குறிப்பாக அவர் பாடிய புஷ்பலதிகா ராகத்தை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு செய்து புஷ்பலதிகா “நெனப்பு..ஒரு தனி ரகம்”என போட்டு இருந்தார்.பல ரசிகர்கள் இவருடைய புஷ்பலதிகா பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த பதிவை பார்த்த இளையராஜா அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதிலும் குறிப்பாக “உங்க புஷ்பலதிகா நெனப்பு..வேற ரகம்!” என மனமார பாராட்டியுள்ளார்.
சஞ்சய் சுப்ரமண்யன் சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வருகிறார்.
இவர் அரிய தமிழ் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு இசை வடிவம் தந்து பாடுவதில் வல்லவர்.எந்தப் பாடலாக இருந்தாலும் அதை மனனம் செய்து அதனுடைய பொருள் உணர்ந்து மனம் ஒன்றிப் பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.