தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக திகழ்பவர் இசையானி இளையராஜா.தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையில் புது புது நுட்பங்களை கொண்டு வந்து ரசிகர்களை தன்னுடைய இசையால் மயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் மற்ற கலைஞர்கள் இளையராஜாவிடம் இருந்து பாராட்டை பெற தவமாய் தவமிருக்கும் காலகட்டத்தில்,தற்போது அவரே ஒரு பிரபல பாடகரை புகழ்ந்து தன்னுடைய டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: சீரியல் நடிகை TO சொகுசு கப்பல் உரிமையாளர்…கோடிகளில் மிதக்கும் ஆல்யா மானசா..!
பிரபல கர்நாடக இசை பாடகரான சஞ்சய் சுப்ரமண்யன் நேற்று சென்னையில் “தமிழும் நானும்” என்ற இசை நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி அங்கே இருக்கக்கூடிய ரசிகர்களை பரவசப்படுத்தினார்.அதிலும் குறிப்பாக அவர் பாடிய புஷ்பலதிகா ராகத்தை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவு செய்து புஷ்பலதிகா “நெனப்பு..ஒரு தனி ரகம்”என போட்டு இருந்தார்.பல ரசிகர்கள் இவருடைய புஷ்பலதிகா பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த பதிவை பார்த்த இளையராஜா அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதிலும் குறிப்பாக “உங்க புஷ்பலதிகா நெனப்பு..வேற ரகம்!” என மனமார பாராட்டியுள்ளார்.
சஞ்சய் சுப்ரமண்யன் சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வருகிறார்.
இவர் அரிய தமிழ் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு இசை வடிவம் தந்து பாடுவதில் வல்லவர்.எந்தப் பாடலாக இருந்தாலும் அதை மனனம் செய்து அதனுடைய பொருள் உணர்ந்து மனம் ஒன்றிப் பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.