மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் உண்மை இல்லை.. முகத்திரையை உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது மனோ பாலாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, ”என் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நண்பர் நடிகர், இயக்குநர் மனோபாலா காலமான செய்திகேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும், பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் சொந்தமாக இயக்குனர் ஆனார்.

என்னை ரோட்டில் சந்தித்து தேதிக்காக வாய்ப்பு கேட்ட எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர். நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் மேம்பாலத்தை தாண்டுகின்ற நேரத்தில் பாலத்தில் நான் வருகின்ற நேரத்துக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்.

பின்னர் நடிகரானாலும், இயக்குநரானாலும் அவ்வப்போது வந்து இசை ரெக்கார்டிங் நேரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்” என்று பேசினார். இதனை கேட்ட ரசிகர்கள் மறைந்த மனிதனுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது கூட தற்பெருமை அவசியமா? என கேட்டு இளையராஜாவை விமர்சித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், இளையராஜாவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய் என்றும், கோடம்பாக்கம் பாலத்தின் மேல் நின்று இளையராஜாவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் மனோபாலாவுக்கு கிடையாது என்றும், மனோபாலா ஏற்கனவே பத்திரிக்கையாளராக இருந்து பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட் ஆக இருந்து வந்தார்.

இதனையடுத்து, அந்தபின்னர் சொந்தமாக இயக்குனாராக பல படங்களை இயக்கியவர் மனோபாலா எனவும், அப்படி இளையராஜா காருக்காக பல மணி நேரம் பாலத்தின் மேல் மனோபாலா நின்று நேரத்தை வீணடிக்க மாட்டார் எனவும், மனோபாலா எல்லோரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் பழக்கூடியவர் என்றும், காலமாற்றத்தால் தன்னை நடிகராக உயர்த்திக் கொண்டவர் என கே ராஜன் தெரிவித்து இருக்கிறார். இப்படியொரு சமயத்தில் ஏன் இளையராஜாவின் வாயில் இது வரலாமா என்று கே ராஜன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Poorni

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

47 minutes ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

48 minutes ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

3 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

3 hours ago

This website uses cookies.