சினிமா / TV

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை: தனது சிம்பொனி இசையை அரங்கேற்றிவிட்டு லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இசை கோர்ப்பாளர் நிக்கி தாமஸ் அழகாக அவருடைய குழுவினருடன் சிம்பொனியை வாசித்தார்.

எப்போதும் ஒரு இசையை வாசித்த உடன் எல்லாரும் அமைதியாக இருப்பார்கள். கை தட்டக்கூடாது என்பது விதி. ஆனால், அதையும் மறந்து மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இசை கோர்ப்பாளரே ஆச்சர்யமடையும் அளவுக்கு ஆரவாரம் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் 80 பேர் என்னுடன் வாசித்தனர்.

சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடலையும் நான் பாடினேன். இதுவரை நான் அவர்கள் இசையில் பாடியது இல்லை. ஆனால், அவர்கள் அழகாக வாசித்தனர். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. தமிழக அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்தது.

இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவன் அருள்புரிந்தார். என்னை இசைக் கடவுள் என அழைக்கின்றனர், என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம். நான் சாதாரண மனிதன்தான். எனக்கு 81 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்யப் போகிறார் என நினைக்காதீர்கள். ஏனென்றால், இனிதான் ஆரம்பமே.

தற்போது 13 நாடுகளில் எனது சிம்பொனி இசையை நிகழ்த்துகிறேன். அக்டோபர் 6ம் தேதி துபாய், செப்டம்பர் 6ல் பாரீஸ், ஜெர்மன் என வரிசையாக நிகழ்ச்சிகள் உள்ளன. சிம்பொனி இசையை யாரும் டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம். நேரில் வந்து கேளுங்கள். பண்ணைபுரத்தில் இருந்து எனது வெறுங்கால்களில் எப்படி வந்தேனோ, அதேபோல்தான் இன்றும் இந்த இடத்தில் நிற்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த இளையராஜாவை, தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி வரவேற்று, அவர் இந்தியாவுக்கே பெருமை என பாராட்டினார். அதேபோல், பாஜக சார்பில் கரு நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு ஆகியோர் இளையராஜாவை வரவேற்று வாழ்த்திப் பேசினர்.

மேலும், 35 நாட்களில் சிம்பொனியை எழுதி முடித்து அதற்கு வேலியண்ட் என பெயரிட்டிருந்தார் இளையராஜா. இந்த சிம்பொனியை உலகின் சிறந்த இசைக் குழுவினரான ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினருடன், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு 45 நிமிடங்கள் லண்டனில் அரங்கேற்றினார்.

Hariharasudhan R

Recent Posts

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

16 minutes ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

1 hour ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

3 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

4 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

5 hours ago

This website uses cookies.