தேனாண்டாள் முரளி தலைமையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில், படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த பல நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு கொடுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்களாம்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிம்பு மீது புகார் கொடுத்துள்ளதாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் மீதும் புகார் பாய்ந்து உள்ளதாம். மேலும், இந்த லிஸ்டில் அமலபால், எஸ்.ஜே.சூர்யா, விஷால், யோகி பாபு மற்றும் அதர்வா போன்ற பல நட்சத்திரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வந்தது.
முன்னதாக, நடிகர் வடிவேலு, சிம்பு உள்ளிட்ட பிரபலங்களுக்கு இப்படி ரெட் கார்டு போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்து ஒரு சில இடைவெளிக்குப்பின் மீண்டும் நடிக்க தொடங்கினர்.
இப்படியான நிலையில், தற்போது நடிகர் தனுஷ், அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட 14 பிரபலங்களுக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.