நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தனர்.
இவர்கள் விவாகரத்து வழக்கு 2 வருடமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 வருடமாக அரசியல் வாரிசுடன் நெருக்கமாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியுடன் 20வருட நட்பு குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
கனிமொழியின் அரசியல் பயணத்தை போற்றும் விதமாக, ஒரு யூடியூப் சேனல் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழியுடன் தனது நீண்ட கால நட்பு பற்றிய விவரங்களை முதன்முறையாக பகிர்ந்தார்.
ஐஸ்வர்யா கூறியதாவது: “பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுவேன். எங்களது நட்பு 20 ஆண்டுகளாக நீடிக்கிறது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உறவு.
இதையும் படியுங்க: நீயெல்லாம் Second Hand : சமந்தா மீது நெட்டிசன்கள் மோசமான விமர்சனம்..!!
நான் எப்போதும் சோர்வாக இருந்தால், முதலில் போன் செய்து பேசுவது அக்காவிடம்தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து பல முறை நான் திட்டியுள்ளேன். ‘இன்னும் நல்லா பேசனும்’ என கூறியதுண்டு.
எனக்கு நண்பர்கள் வட்டாரம் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர் கனிமொழி அக்கா. அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும், நான் கோவிலுக்கு செல்லும்போது வழிகாட்டியாக இருப்பவர் அவர்தான். எந்த ஊருக்கு சென்றாலும் அக்காவின் மக்கள் என்னை பாதுகாப்பாக கூட்டிச்செல்வார்கள்.
கனிமொழி அக்காவை பார்க்கும் போது ரொம்ப Rough ஆக தெரிவார். ஆனால் அவர் சிரித்தால் அவ்வளவு அழகு. அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என பகிர்ந்தார் ஐஸ்வர்யா.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.