பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இதில் சத்யராஜ், காஜல் அகர்வால், சர்மான் ஜோஷி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் இந்நாள் வரை ரூ.175 கோடிகளையே வசூல் செய்துள்ளது. இதனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்சயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது சல்மான் கான் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டார்.
“சல்மான் கானை வைத்து படம் இயக்குவது சுலபம் கிடையாது. நாம் நினைத்தது போல் படம் பண்ண முடியாது. அவருடைய திட்டத்தின்படிதான் நீங்கள் படம் பண்ண முடியும். அவர் நான்கு மணி நேரம்தான் நடிப்பார். அந்த நான்கு மணி நேரத்தில் அவருக்குரிய காட்சிகளை எடுக்க வேண்டும். இப்படி இருக்கும்போது ஒரு இயக்குனருக்கு எப்படிபட்ட கஷ்டம் இருக்கும் பாருங்கள்.
எனக்கு தெரிந்த ஒரு இயக்குனர் சல்மான் கானை வைத்து படம் இயக்கினார். 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மூன்று நாளைக்குத்தான் படப்பிடிப்புக்கு வந்தாராம். மீதி 3 நாட்கள் டூப் போட்டு எடுத்தார்களாம்” என்று சல்மான் குறித்து தனஞ்சயன் பகிர்ந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.