எம்ஜிஆரை திருப்திப்படுத்துவது கஷ்டமான விஷயம் என அவருடன் பணியாற்றிய பிரபலம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி நடிப்பு அசாதாரணமதல்ல. இவர்களை பார்த்து தான் இன்றைய தமிழ் சினமா உலகமே இயங்கி கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு இசை அமைப்பது என்றாலே எம்எஸ்வி தான். சிவாஜி படங்களுக்கு எவ்வாறு இசை, எம்ஜி படங்களுக்கு எவ்வாறு இசையமைப்பது என்று இவர் மட்டும் அறிந்த தனி ரகசியம்.
அப்படி போடும் பாடல்கள் காலத்தை தாண்டி ஒலிக்கும். அப்படி ஒரு சக்தி உண்டு. அதுவும் எம்ஜிஆர் பாடல்களுக்கு அதிகமாக வரி எழுதியவர் வாலி அவர்களே…
எம்ஜிஆர் படங்களில் அதிகமாக அவரை புகழ்ந்து தள்ளக்கூடிய பாடல் மற்றும் அண்ணாவின் சாதனை, தத்துவம் என ஒளிந்திருக்கும்.
சிவாஜிக்கு சோகம், தத்துவம், காதல் என தனி ரகம். இப்படிப்பட்ட சூழ்நிலையல் எம்எஸ்வி சொன்ன ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் எம்.ஜி.ஆரும் இசைஞானம் உள்ளவர். பொதுவாக ஒரு படத்திற்கு மெட்டை ஓகே செய்வது இயக்குனர்தான். ஆனால், எம்.ஜி.ஆர் படம் எனில் அதை முடிவு செய்வது எம்.ஜி.ஆர்.தான்.
அவரை அவ்வளவு சுலபமாக திருப்திபடுத்திவிட முடியாது. பல ட்யூன்களை கேட்ட பின்தான் அவர் முடிவு செய்வார். இதுபற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
20, 30 டியூன்களை போட்டு காட்டுவேன். இது வேண்டாம் அடுத்து என்பார். அதன்பின் முதலில் போட்ட டியூனின் பல்லவியையும், 8வதாக போட்ட சரணமும் நன்றாக இருக்கிறது. இரண்டையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்பார்.
அதேபோல், உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திறு ஒரு பாடல் மட்டும் இசையமைக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு பாடலுக்காக 20 ட்யூன் போட்டுள்ளார்.
எம்ஜிஆர் திருப்தியாக வில்லை, பின்னர் கோபத்தில் மேலும் 15 ட்யூன்களை போட்டு காட்டினேன், எல்லாத்தையும் கேட்டு அமைதியாக யோசித்த எம்ஜிஆர் எல்லாம் நன்றாக இருக்கிறது முதலில் போட்ட ட்யூனே சிறப்பாக இருக்கிறது அதைவே வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
முதலில் போட்ட ட்யூனுக்காக 35 ட்யூன் போட்டு காண்பித்தாக எம்எஸ்வி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.