அப்பாவின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என விஜய் மகன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், மாநாட்டை பற்றி எதிர்க்கட்சிகளையும் பேச வைத்துவிட்டார்.
மாநாட்டுக்கு கூடிய இளைஞர்களின் கூட்டத்தை பார்த்து எதிர்கட்சிகள் மிரண்டு போனது மட்டுமல்லாமல், விஜய் சொன்ன கட்சிக் கொள்கை, கோட்பாட்டை பற்றி தினமும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: தனுஷ்க்கு திருப்பி கொடுத்த SK.. மீண்டும் இணையும் கூட்டணி : வெளியான மாஸ் அப்டேட்!
விஜய் தனது கடைசி படத்தை அறிவித்தாலும், பெரும்பாலும் அரசியல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கூட தவெக ஆலோசனை கூட்டத்தை கூட்டி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்.
வாரிசு அரசியல் பற்றி பேசி திமுகவை அலற விட்டுள்ளார். இந்த நிலையில் தனது குடும்பத்தினரை கட்சிக்குள் நெருங்க விடாமல் பார்த்து வருகிறார்.
இது குறித்து பேசிய அவரது தாய் ஷோபா சந்திரசேகர், விஜய் கட்சி தொடங்கியது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லைதான். விஜய்யோட பிள்ளைகளும் கட்சி பற்றி பேசவே மாட்டார்கள். கட்சிக்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஜேசன் சஞ்சய் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மகன் சஞ்சய் சினிமா இயக்குராக அவதாரம் எடுத்துள்ளார். அதே போல மகள் திவ்யா சாஷா படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற சஞ்சய்யின் ஆசையும் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.