தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கினார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார் . இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்தார்.பிரமாண்டமாக உருவாகிய ஜவான் படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை அள்ளியுள்ளது.
சுமார் ரூ. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.1,117 கோடிக்கு வசூல் ஈட்டியுள்ளது. இது அட்லீயின் கெரியரில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றியால் அட்லீ கொஞ்சம் மிதப்பில் சுற்றி திரிகிறாராம். ஓவராக சீன் போடுகிறார் என்று கூட செய்திகள் வெளியானது.
இருக்காதா பின்ன? அறிமுகம் இயக்குனர் என்பதிலே இவ்வளவு பெரிய சாதனை படைத்தால் கொஞ்சம் அகம்பாவம் இருக்கத்தான் செய்யும். இப்படத்தின் மாபெரும் வசூலில் இருந்து கிட்டத்தட்ட ரூ. 480 கோடி வரை தயாரிப்பாளருக்கு ஷேர் கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 730 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதுவரை எந்த ஒரு இந்தி படத்திற்கும் இவ்வளவு பெரிய வருவாய் கிடைத்தது இல்லை. ஜவான் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 350 கோடி தான். ஆக சுமார் ரூ. 380 கோடிக்கு லாபம் மட்டுமே அள்ளியுள்ளார் தயாரிப்பாளரான ஷாருக்கான். இந்து பாலிவுட்டின் மிகப்பெரிய சாதனை என பேசிக்கொள்கின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.