தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமாக்காரர்கள் என்றால் விவாகரத்து சகஜம் தான் என்ற பேச்சும், அதற்கேற்றவாறு பிரபலங்களின் விவாகரத்து செய்திகளும் தொடர்ச்சியானது.
கடந்த செப்டம்பர் மாதம், ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
குடும்ப நலன் கருதியே இந்த முடிவு எடுத்ததாக ஜெயம் ரவி கூறினாலும், ஆர்த்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடைய விளக்கத்தை ஒரு அறிக்கையாக வெளியிட்டார்.
தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும், சட்டம் தனது போராட்டத்திற்கு துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்க: ஜெப்ரிக்குனா மட்டும் எல்லாரும் வந்திருப்பாங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை மிரள வைத்த VJS!
இதற்கு பின்னர், ஜெயம் ரவி, தன் மனைவி தன்னிடம் இருந்த அனைத்தையும் பறிப்பதாகவும், அவர் தற்போது சென்னையின் அடையாறில் உள்ள அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து கோரினார். இந்த வழக்கின் விசாரணையை பார்க்கும் குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் மனம் விட்டு பேசும் வகையில் அறிவுரை வழங்கியது.
இருவரும் ஒரு மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியை விட ஆர்த்தி மீண்டும் சேர்ந்து வாழ தயாராக உள்ளதாகவும், இதற்காக ஆர்த்தி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
இந்த விவாகரத்து வழக்கு குறித்து மத்தியஸ்தர் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என்றும், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.