தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் ஹேண்ட்சம் ஹீரோவாகவும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாகவும் பார்க்கப்பட்டு வந்தவர் தான் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பட வாழ்க்கை துவங்கி தொடர்ந்து தனது திறமையின் மூலமாக அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
இன்று பிரபலமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி திரைப்படங்களை சந்தித்து வந்தார். இதனால் எப்படியாக ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் தான் பிரதர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் என்பது சுத்தமாக இல்லாமல் இருக்கிறது என பரவலாக கோலிவுட் திரை உலகில் பேச்சுக்கள் கிளம்பி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பட்டையை கிளப்பி வரும் நிலையில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் சத்தம் இல்லாமல் தூசுகள் நிறைந்த ரூமில் அடைக்கப்பட்டது போல் கிடைக்கிறது.
இந்த படம் வெளியாகிறதா? என்ற ஒரு கேள்வியே ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அந்த அளவுக்கு பிரமோஷன் இல்லாமல் கிடைக்கிறது பிரதர் திரைப்படம். காரணம் பிரதர் படத்தை பிரமோஷன் செய்ய தயாரிப்பு தரப்பிடம் பணம் இல்லை. அதனால் ப்ரோமோஷன் செய்ய முடியாமல் படக்குழு திணறுவதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
எப்போதுமே ஒரு திரைப்படத்தின் டிரைலர் வெளியானால் அந்த ட்ரைலருக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்துதான் படத்தின் அடுத்த கட்ட ப்ரோமோஷன்களை எடுத்துச் செல்ல முடியும் .
இது இப்படி இருக்க படத்தின் ப்ரோமோஷன் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இப்படியே போனால் படம் வெளியானால் கூட அதை யாரும் பார்க்க செல்ல மாட்டார்கள் என்ற ஒரு பேச்சு நிலவி வருவதால் ஜெயம் ரவியை பார்த்து பலரும் உச் கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். மனுசனுக்கு வாழ்க்கை தான் சரிவர அமையாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் அவருடைய படமும் இப்படி பிரச்சனைகளை சந்திக்கிறதே என வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
This website uses cookies.