ஒரு காலத்தில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வந்த நடிகர் ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்து அடுத்தடுத்து சினிமாவில் மார்க்கெட் இழந்து வருகிறார் .
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பிரதர். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்துக்கு போட்டியாக வெளிவந்து அடையாளமே தெரியாத அளவுக்கு வசூலில் மோசமாக பின்தங்கி விட்டது .
இதனால் ஜெயம் ரவிக்கு அடிக்கு மேல் அடி விழுந்து வருகிறது. கோமாளி திரைப்படம் தான் கடைசியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது. வரிசையாக பூமி, அகிலன், இறைவன், சைரன், பிரதர் எனத் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்து விட்டார் ஜெயம் ரவி .
பிரதர் திரைப்படத்தின் மூலம் வெறும் ரூ. 4 கோடி ரூபாய் தான் ஷேர் கிடைத்திருப்பதாகவும் இது ஜெயம் ரவி நடித்த படங்களிலே மிக மோசமான நஷ்டத்தை சந்தித்த படமாக பார்க்கப்படுகிறது. தனி ஒருவன் படத்தின் போதே கிட்டத்தட்ட 25 கோடி ஷேர் கிடைத்தது.
அப்படி இருக்க தற்போது வெளிவந்த பிரதர் படத்திற்கு வெறும் 4 கோடி ஷேர் கிடைத்திருப்பது பெரும் தோல்வியாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் மனைவி, பிள்ளைகள் குடும்பங்களை பிரிந்து விட்ட ஜெயம் ரவி குடும்ப பாசத்தை காட்டுகிறேன் அக்கா பாசத்தை காட்டுகிறேன் என பிரதர் திரைப்படத்தில் நடித்தது யாருக்கும் கனெக்ட் ஆகவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் ஜெயம் ரவி எப்படி மீண்டும் மார்க்கெட் பிடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.