“தனிமையில் இனிமை காண்கிறேன்”… விவாகரத்து சர்ச்சைக்கு பின் சிங்கிளா ட்ரிப் அடித்த ஜெயம் ரவி!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து வைத்திருக்கிறார் .

இதனிடையே பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்த என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து விட்டதாக சர்ச்சை கிளம்பியது . இது பெரும் பூதாகரமாக வெடித்தது.

இந்த விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது அவர் மாமியார் தான் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், ஜெயம் ரவி தன்னுடைய மாமியாரின் தயாரிப்பில் கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இவர்களது விவாகரத்து விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர்கள் இருவரும் அது குறித்து எதுவுமே கூறாமல் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் ஜெயம் ரவி தனது விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு தனிமையில் கோவாவிற்கு ட்ரிப் அடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அவர் இந்த ட்ரிப்பை என்ஜாய் செய்து வருவதாக கூறப்படுகிறது.

எப்போதும் தனது மனைவியுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜெயம் ரவி ஏன் இப்படி தனிமையில் செல்கிறார் என்ற கேள்வி தான் தற்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இதனால் விவாகரத்து உண்மைதானா? “தனிமையிலே இனிமை காண ஆரம்பித்து விட்டாரா ஜெயம் ரவி?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

16 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.