நடிகர் ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்னால் தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதை அடுத்து மனைவி விவாகரத்தில் எனக்கு விருப்பமில்லை எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் இந்த விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் தேன்மொழியும் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜராகி இருந்தார். ஆனால், அவரது மனைவி காணொளி காட்சி மூலமாக ஆஜர் ஆகி இருந்தார்.
ஆர்த்தி நேரில் வராததால் இதுவே பெரிய கேள்வியாக இருந்துள்ளது. மனைவி ஆர்த்தி முன்னதாக…நான் ஜெயம் ரவியுடன் வாழ ஆசைப்படுகிறேன். அவர் என்னிடம் விவாகரத்து குறித்து எதுவுமே கலந்து ஆலோசிக்காமல் திடீரென விவாகரத்து அறிவித்துவிட்டார்.
நானும் என் குழந்தைகளும் இதனால் தவித்துக் கொண்டிருக்கிறோம் என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி முன்னதாக தெரிவித்திருந்தார். அப்படி அவருக்கு உண்மையிலேயே ஜெயம் ரவியுடன் வாழ ஆசை இருந்தால் அவர் இந்த விஷயத்தில் இந்த நேரத்தில் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து அவரைப் பார்த்தாவது பேச வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ஆவது நிச்சயம் வந்திருப்பார் .
எனவே இந்த விஷயத்தில் ஆர்த்தி பேசுவது வெறும் பொய்யா? நடிப்பா? என்று பலரது மனதிலும் கேள்வி எழுந்து இருக்கிறது. காணொளி காட்சியின் மூலமாக ஆஜர் ஆகியிருந்த ஆர்த்தி மற்றும் நேரில் வந்திருந்த ஜெயம் ரவி இருதரப்பு இடையேயும் நீதிபதி வாதத்தை கேட்டார் .
இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரசத் தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை இன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.