தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொள்வதுடன் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து விட்டு பின் மனகஷ்டம் காரணமாக பிரிந்து விடும் ஜோடிகளே அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஜெயம் ரவி ஆரத்தி ஜோடியும் இணைந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த ஜோடியின் விவாகரத்து பேச்சு தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
முன்னதாக ஜெயம் ரவியின் மனைவி அவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து விட்டார். அதாவது, புகைப்படத்தினை ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது பலரிடையே சந்தேகத்தை கிளப்பியது. ஜெயம் ரவி கடைசியாக நடித்த 4 படங்களான சைரன், அடங்கமறு, பூமி, வீராப்பு போன்ற படங்களை தயாரித்தவர் அவரது மாமியார்தான் அதாவது, ஆர்த்தியின் தாயார்.
இந்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும், சைரன் மட்டும் தயாரிப்பாளர் தரப்பிற்கு சற்று லாபத்தை கொடுத்தது என்று கூறப்படுகிறது. தற்போது, காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். ஜெயம் ரவியை இயக்குனர் பாண்டியராஜ் அணுகி ஒரு படத்தினை இயக்குவதற்கு கதை கூறியுள்ளார்.
இப்படத்தினை ஜெயம் ரவியின் மாமியார் தயாரிப்பாக இருந்ததுடன் ஒரு கோடி ரூபாய் பாண்டியராஜ் முன்பணமும் பெற்றுக் கொண்டாராம். 52 கோடி பட்ஜெட்டில் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பதாக இருந்தது. மாமியார் என்று கூட பாராமல் தனது சம்பளம் 25 கோடி ரூபாய் ஜெயம்ரவி கேட்டுள்ளார். அதற்கு, சமீபத்தில் நீங்கள் நடித்த எந்த படமும் ஓடவில்லை.
அவ்வாறு, இருக்கையில் எப்படி 25 கோடி கொடுக்க முடியும் என்று வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மேலும் ஜெயம் ரவியின் மாமியார் பாண்டியராஜிடம் பட்ஜெட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்ட நிலையில், பாண்டியராஜன் வேறு ஹீரோவை பார்த்துக் கொள்வதாக விஜய் சேதுபதியிடம் சென்று விட்டாராம். நல்ல இயக்குனர் ஒருவரின் படத்தினை இப்படி மாமியாரிடம் சம்பளத்தை அதிகமாக கேட்டு வாய்ப்பைத் தவறிவிட்டதால் இவர்களின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.