தமிழ் திரையுலகிற்கு எப்படி சிவாஜியோ, அது போன்று தெலுங்கு பட திரையுலகிற்கு என்டிஆர் என அழைக்கப்படும் நந்தமுரி தரக்கா ராமராவ். இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவராவார். சினிமா துறையை தனது நடிப்பால் எப்படி ஆட்டிப் படைத்தாரோ, அதுபோன்று ஆந்திர அரசியலிலும் தவிர்க்க முடியாதவராக திகழ்ந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 3 முறை முதலமைச்சராக தேர்வானார் என்டிஆர். இவருக்கு மொத்தம் 8 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அவர்களில் ஹரி கிருஷ்ணாவின் மகன்தான் ஜுனியர் என்டிஆர். தனது தாத்தாவை போலவே இவரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் ஆவார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான RRR திரைப்படம் சக்கை போடு போட்டது.
இப்படி தலைமுறை தலைமுறையாக தெலுங்கு சினிமாவை ஆண்டு வரும் NTR-ன் குடும்பத்திற்கு தற்போது சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
என்டிஆரின் மகளும், ஜுனியர் என்டிஆரின் அத்தையுமான உமா மகேஸ்வரி, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
என்டிஆரின் செல்ல மகளாக வளர்ந்து வந்த உமா மகேஸ்வரி, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் மணந்தார். பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்தார் உமா மகேஸ்வரி. பின்னர், ஸ்ரீனிவாச பிரசாத் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த சூழலில், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் உமா மகேஸ்வரி தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்டிஆரின் குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.