தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.
அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
இந்தநிலையில், ஜோதிகா கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அவருக்கு நடிகை ரம்பா டஃப் கொடுக்கும் விதத்தில் இருந்தவர். அப்போது தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த ரம்பா சகோதரரை வைத்து 3 ரோசஸ் என்ற படத்தினை தயாரித்து அந்த படத்தில் ஜோதிகா, ரம்பா, லைலா இணைந்து நடித்து இருந்தனர்.
பின்னர் பைனான்சியரிடமிருந்து கடன் வாங்கி அந்த படத்தினை தயாரித்த ரம்பா, படத்தை முடிக்க 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில், அதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கும் லைலாவுக்கும் இடையில் சண்டை வந்து ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் ஜோதிகாவுக்கு லைலா மீது சில இருந்த கருத்து வேறுபாட்டால் வாய் சண்டை போட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதற்கு காரணம் 3 ரோசஸ் படம் ஆரம்பித்த போது, ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார். அப்போது லைலா, சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்ததை பார்த்து தான் லைலா மீது சிடுசிடுவென இருந்துள்ளார். அந்த மன நிலையில் தான் லைலா அந்த படத்தினை முடித்தும் கொடுத்து இருக்கிறார்.
இதனால் குறித்த நாளில் படத்தினை முடிக்காமல் போக, அதையெல்லாம் சரி செய்து ரம்பா படத்தை முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறார். ஆனால் படமும் சரியாக ஓடாமல் மோசமான நஷ்டத்தை ரம்பாவிற்கு கொடுத்து கடனாளியானார்.
அப்போது இருந்து ரம்பா தமிழில் தலையே காட்டாமல் வேறு மொழிகளில் நடித்தும் 2010ல் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கிறார். 3 ரோசஸ் படத்தின் போது லைலா பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் வந்து இருக்கிறார். இதனிடையே, சூர்யாவை காதலித்து வந்த சமயத்தில் லைலாவுடன் ஜோதிகா சண்டைப் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சமயத்தில் இந்த செய்தி மிகப்பெரியளவில் பேசப்பட்டது. அப்படியிருக்கும் போது தான் சூர்யா – ஜோதிகா திருமணம் 4 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.