புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல எதிர்ப்புகளை மீறி சூர்யாவுடன் 2006 இல் திருமணம் ஜோதிகாவுக்கு நடந்தது. இதற்கு பின்னர், சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார். அதன் பின் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. தமிழ் ,மலையாளம், இந்தி மொழிகளில் கமிட்டாகி ஜோதிகா நடித்து வருகிறார்.
முன்னதாக 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தற்போது, படு பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யாவுக்கு பெற்றுத் தந்த சூராரை போற்று படத்தை தற்போது, இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். சர்ஃபிரா என பெயர் வைக்கப்பட்ட அந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
இதனை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்நிலையில், ஜோதிகா தான் அக்ஷய்குமார் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறி இருப்பதாவது, வாழ்த்துக்கள் அக்ஷய்குமார் ஒரு ரசிகையாக தன் படுக்கையறையில் உங்களின் போஸ்டரை வைத்திருந்தவள். இன்று உங்களுடன் ஸ்பெஷலான 150 ஆவது படத்தை தயாரிக்கிறாள். இது மறக்க முடியாத அனுபவம் எனக்கு என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.