இயக்குனர் பாக்யராஜ் இயக்குனராகவும் கதை திரைக்கதை வசன கர்த்தாவாக மிகவும் கைத்தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாக்யராஜ் தன் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யாவை சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், 1981ம் ஆண்டு கே.பாக்யராஜ், பிரவீனா இருவரும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்துகொண்டனர். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரை பிரபலங்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், எதிர்பாராதவிதமாக திருமணம் நடந்த இரண்டே ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இதனால், உடைந்துபோன இயக்குனர் பாக்யராஜ், அதன் பின்னர் முதல் காதலில் இருந்து மீண்டு வந்து நடிகை பூர்ணிமாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் பிரவீனாவை மறக்க முடியாத கே பாக்யராஜ், அவர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை இன்றும் தனது விரலில் அணிந்துள்ளது உள்ளார்.
மேலும், அந்த மோதிரத்தை பாக்யராஜ் இதுவரை எந்த காரணம் கொண்டும் கழட்டியதே இல்லையாம். அதுமட்டும் இல்லாமல் அவரது அலுவலகத்தில் பிரவீனாவின் புகைப்படத்தையும் வைத்து இன்றுவரை பாதுகாத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, முதல் காதல், முதல் மனைவி பிரவீனாவின் நினைவாக 40 ஆண்டுகளாக அதே மோதிரத்துடன் பாக்யராஜ் வலம் வருவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
This website uses cookies.