“மன்னித்துவிடுங்கள் அமீர் அண்ணா” பருத்திவீரன் விவகாரம் குறித்து ஞானவேல் ராஜா அறிக்கை!

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் கார்த்திக் , பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தை இயக்கிய அமீரால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறியதற்கு அமீர் நீண்ட அறிக்கையுடன் விளக்கம் அளித்து பிரச்சனை குறித்து எல்லோருக்கும் தெளிவு படுத்தினார்.

இதையடுத்து இயக்குனர் அமீருக்கு பலரும் ஆதரவு குரல் கொடுத்து ஞானவேல் ராஜாவை திட்டி தீர்த்தனர். படம் பணம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட சமயத்தில் அமீர் அங்கும் இங்குமாக கோடிக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை வெளியிட்டுள்ளார் என்றெல்லாம் பலர் கூறினார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ள ஞானவேல் ராஜா,

“பருத்திவீரன் படத்தின் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது. இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன். ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் நெருங்கிய பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது”.

அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என அறிக்கையில் குறிப்பிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Ramya Shree

Recent Posts

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

26 minutes ago

ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…

32 minutes ago

திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…

1 hour ago

நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…

2 hours ago

பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…

2 hours ago

மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!

ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…

3 hours ago

This website uses cookies.