கே.ஆர்.விஜயாவை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்… அப்போவே அப்படியா?

Author:
27 July 2024, 11:33 am

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அந்த காலத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் கே ஆர் விஜயா. 1966 ஆம் ஆண்டு எம் வேலாயுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த காலத்திலேயே இவரது கணவர் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வந்தார். சொந்தமாக சீட் ஃபண்ட் நடத்தியதோடு விமானமும் வைத்திருந்தார். இவர் பென்சார் முதலாளியாக இருந்த சமயத்தில் ரூபாய் 100 கோடி அடித்ததாக தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இந்த விஷயம் சுதர்சன் ஃபண்ட் என்ற பெயரில் 80களில் நடந்தது.

இதற்கு நடிகைகளின் கிளாமர் அவசியமான ஒன்றாக இருந்தது. அந்த சமயங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வரும்போது காக்டெயில் விருந்து கொடுத்தவர் வேலாயுதம். அதுபோன்ற சமயத்தில் தான் கே ஆர் விஜயா விருந்துக்காக பயன்படுத்தப்பட்டார். நைட் பார்ட்டி விருந்துகளுக்கு இரையாக்கப்பட்டார் கே ஆர் விஜயா. அதுமட்டுமில்லாமல் அந்த காலத்திலேயே கே.ஆர். விஜயா தான் ஷூட்டிங்கிற்கு விமானத்தில் சென்று இறங்குவார்.

அது வேலாயுதம் அவர்களின் விமானம்தான். இப்படித்தான் கே ஆர் விஜயா அந்த காலத்திலேயே மாஃபியா கும்பலிடம் சிக்கி அதிலிருந்து வெளியே வர முடியாமல் இருந்து வந்தார். இப்படி கணவரால் கே ஆர் விஜயா நைட் பார்ட்டிகளில் விருந்தாக்கிய கொடூரம் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், இதுதான் உண்மை என கூறியுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?