தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!
மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)
இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். அவர்கள் பிரிவதாக நேற்றில் இருந்தே செய்தி பரவி வந்தது. தற்போது அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்தை அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு படத்தின் நிகழ்ச்சியில் பேசி உள்ளார். அதில், போன மாதம் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்துக்காக கோர்ட்டுக்கு போன விஷயத்தில் பரபரப்பாகி தமிழ் மக்கள் வேதனைப்பட்டனர். இதற்குத்தான் படம் எடுக்கிறோமா இரு குழந்தைகளை விட்டுவிட்டு நாங்கள் பிரிந்து செல்கிறோம் என்பது போலதான் அந்த குழந்தைகளின் கதி என்ன? அந்த குடும்பத்தின் மாபெரும் தலைவனுடைய மனசு எப்படி வேதனைப்பட்டு இருக்கும்.
என் வேதனை அவர் ரசிகர்கள் இதையே பாலோ பண்ண கூடாது என்பதுதான். இப்போ புதுசா பார்த்தால், ஜிவி பிரகாஷ் சைந்தவி அந்த பொண்ணு, நல்ல பொண்ணு முதல் பாட்டு என் உணர்ச்சிகள் படத்தில் பாடுச்சு, காதல் பண்ணி நல்ல புரிந்து கொண்டு தான் கல்யாணம் பண்ணுச்சு, அதன் பின் ஏன் கசப்பு வந்துச்சு, விட்டுக்கொடுத்து வாழ்ந்தவன் கெட்டுப் போவதில்லை. இந்த பண்பாடு சினிமாக்காரர்களுக்கு நடக்கக்கூடாது என்ற வேதனையில் தான் சொல்கிறேன். கைகோப்பி வணங்குகிறேன் கணவன் மனைவியாக தொடர்ந்து வாழுங்கள். இன்ப வாழ்க்கை வாழுங்கள் நல்ல குழந்தைகளை பெற்றெடுத்து இந்த நாட்டுக்கு தந்து செழிப்போடு வாழுங்கள் என்று கே ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.