சினிமாவில் அந்த தொழில் இருக்கு… நடிகைகள் கற்போடு இருக்கவே முடியாது – Open’னா கூறிய பிரபலம்!

Author: Shree
22 July 2023, 5:31 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள் என்றும் நேரடியாகவே, மறைமுகமாகவோ பலர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.

அந்தவகையில் இது குறித்து பேசியுள்ள பிரபல மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன், சினிமாவில் விபச்சாரம் என்பது ஒரு சைடு தொழில். பல சமயங்களில் விபச்சாரிகள் தான் சினிமா நடிகைகளாக இருந்தார்கள். சினிமாவில் இப்படி ஒரு நிலைமை இருப்பது தெரிந்தே நடிகைகள் சினிமா தொழிலுக்கு வருகிறார்கள். நடிகைகளின் நடிப்பை யாரு பார்த்தது. ஆரம்பத்தில் கவர்ச்சிக்காகவே தான் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

எனவே கவர்ச்சி என்பது உடம்பை காட்டுவது. எவ்வளவு நாள் அவர்களின் மார்க்கெட் இருக்கிறதோ அதுவரை உடம்பை காட்டி பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது அவ்வளவு சுலபமே கிடையாது. அறிமுகம் ஆகும்போது மேக்கப் போட மேக்கப் மேனிடமே எல்லா ஜோலியும் முடிஞ்சிபோயிடும். ஆமாம், மேக்கப்மேன் உன் உடம்பு புல்லா பார்க்கனு அப்போ தான் என்னமாதிரி ட்ரஸ் போடணும்னு சொல்ல முடியும். ஏனென்றால் மேக்கப்மேனிடம் கேட்டு தான் காஸ்டியூம் ட்ரஷனர் வேலையே ஆரம்பிப்பான். இதெல்லாம் தான் சினிமா தொழில் என கே. ராஜன் சினிமாவில் உள்ள ரகசிய விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!