மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். சினிமா துறையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக தைரியமாக பேசுவார் காஜல் பசுபதி.
சாண்டியை விவாகரத்து செய்து 11 வருடம் ஆகியும் இரண்டாம் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்த காஜல் தற்ப்போது திடீரென இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு அதன் புகைப்படங்களை சமூகவலைத்ததில் வெளியிட்டு, ” ஒரு வழியாக தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது. சாரி பிரண்ட்ஸ்…. திடீரென முடிவு பண்ணதால் யாரையும் திருமணத்திற்கு கூப்பிட முடியவில்லை” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் ” சும்மா பொய் சொல்லாதீங்க இது சாண்டியுடன் திருமணம் செய்தபோது எடுத்துக்கொண்ட பழைய போட்டோ என்று எங்களுக்கு தெரியும் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
இந்நிலையில், காஜல் இரண்டாம் திருமணம் பற்றிய செய்திகள் அனைத்திலும் சாண்டியின் புகைப்படமும் இருக்கிறது. அதை குறிப்பிட்டு, மீடியாவை காஜல் பசுபதி விமர்சித்து இருக்கிறார். என்னையா அதுக்குள்ள முடிந்த இரண்டாம் திருமணம்னு போட்டு இருக்கீங்க இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல… “எதுக்குயா எல்லாத்துக்கும் அவன் pic யூஸ் பண்றீங்க. அவனை வாழ விடுங்கயா” என காஜல் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.