மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
காஜலை விவாகரத்து செய்த பின்னர் சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சாண்டி, இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனால் சாண்டியை பிரிந்த பின்னர் நடிகை காஜல் பசுபதி வேறு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 2004 -ம் ஆண்டு வெளியான “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” படத்தில் சிறிய துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த காஜல் பசுபதி, பின்னர் பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காஜல் பசுபதி சினிமாவில் நடக்கும் மோசமான சம்பவங்களை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார், அதில் அவர், திரைப்படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடுபவர்கள், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு தகுந்த மாதிரி தான் சம்பளம் கொடுப்பார்கள் என்றும், மிக கவர்ச்சியான ஆடையில் நடித்தால் சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.