நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
காஜலை விவாகரத்து செய்த பின்னர் சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சாண்டி, இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனால் சாண்டியை பிரிந்த பின்னர் நடிகை காஜல் பசுபதி வேறு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டி – சில்வியா ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதனை பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் காஜல்.
இந்நிலையில் சாண்டி பற்றிய சில உண்மைகளை கூறியுள்ளார் காஜல். சாண்டி தற்போது என்னுடைய நெருங்க நண்பராக இருக்கிறார் என்றும் சாண்டிக்கு பின் இன்னொருவரை காதலித்தேன். ஆனால் திருமணம் வரை சென்றது. பின் அதுவும் ஒரு பிரச்சனையாகி, என் மேல் தப்பு சொல்லியதால் அது செட்டாகாது என்று தனிமையில் வாழ்ந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார். 4 வருடத்திற்கு முன் என்னை எப்போது கைநீட்டினானோ அதிலிருந்து நான் வெளியே வந்துவிட்டேன்.
மேலும் சாண்டியின் மகள் லா லா என்னை மறந்துவிட்டாள். நான் இன்னும் சாண்டியை நினைத்திருக்கிறேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சாண்டி என்னை ஆண்டி என்று மகளிடம் கூறியது கோபப்பட்டேன், அக்கான்னு கூப்பிட சொன்னேன் என தெரிவித்துள்ளார்.
சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் அவரது குழந்தைகளுடன் காஜல் பசுபதி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விவாகரத்து பெற்ற பின்னரும் சாண்டியுடனும், அவரது குடும்பத்தினருடனும் காஜல் பசுபதி நட்புடன் பழகி வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.