மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
இதனிடையே, சாண்டியை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை காஜல் பசுபதி தொடர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் பசுபதி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவு செய்வார். சினிமா துறையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக தைரியமாக பேசுவார் காஜல் பசுபதி.
சாண்டியை விவாகரத்து செய்து 11 வருடம் ஆகியும் இரண்டாம் திருமணம் செய்யாமல் காஜல் தனியாக வாழ்ந்து வருகிறார். காஜல் பசுபதி தற்போது வெளிப்படையாக தன்னுடைய காதல் குறித்து பேசியுள்ளார். அதில், என்னுடைய வாழ்க்கையில் மூன்று நான்கு காதல் வந்தது அது எல்லாமே சாண்டிக்கு தெரியும். நான் காதலித்தவர்கள் என்னை பிரிந்து போக காரணமே நான் அவர்கள் மீது அதிக பொசசிவாக இருந்ததுதான். சண்டிக்கு பிறகு நான் ஒருவரை காதலித்தேன். அவர் மீது அதிக பொசசிவாக இருக்கக்கூடாது என்று நினைத்து இருவரும் முழு பிரீடமாக இருப்போம் என்று பேசினோம். ஆனாலும், அவர் நீ ஏன் அவங்கள காதலிச்ச மாதிரி என்ன காதலிக்கலை என்று என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். நான்கு வருடங்கள் ஒரு நபரை காதலித்தேன். அவர் என்னுடைய பிறந்தநாள் அன்று மனதில் இருந்த மொத்த கோவத்தையும் கொட்டி என்னை அடித்தார். இரவு முழுக்க என்னை அடித்து விட்டு அந்த நாள் நான் அவரை அடித்தேன் என்று வெளியே போய் சொல்லிவிட்டான் என காஜல் தனது வாழ்க்கை குறித்து தற்போது பேசியுள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.