விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பை அழகாக காட்டுவதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரில் நடித்த காவியா அறிவுமதி விலகியதால் தற்போது சிற்பிக்குள் முத்து சீரியலின் கதாநாயகி முல்லையாக நடித்து வருகிறார்.சீரியலில் இருந்து விலகிய பிறகு காவியா என்ன செய்கிறார்? என்ன படத்தில் நடிக்கப் போகிறார்? என்பதை அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். காவியாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார்.
ஆகையால் அவர் முதல் முதலாக மிரள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பரத், வாணி போஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டரை காவியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
திரில்லர் படமாக உருவாகி இருக்கும் மிரள் திரைப்படமானது ஹாலிவுட் படத்திற்கு நிகராக வெறும் 20 நாட்களிலேயே எடுத்து முடித்து இருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கி உள்ளார்.
மேலும் மிரள் படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது. மிரள் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிப்பது குறித்து காவியா ரசிகர்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் இவருடைய விதவிதமான ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதில் மட்டும் காவியா மேடம் படு பிஸியாக இருக்கிறார்.
மேலும் காவியாவின் ரசிகர்கள் இவரை ‘குட்டி நயன்தாரா’ என்றும் இவர் பதிவிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிக்கும் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அத்துடன் மிரள் படத்தில் காவியாவின் நடிப்பை பார்ப்பதற்காகவும் படத்திற்காகவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
This website uses cookies.