அவளிடம் அப்படி என்ன இருக்கு? காதலித்து ஏமாற்றிய கமல்? சட்டை பிடித்து கேட்ட ஸ்ரீ வித்யா!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளுள் ஒருவராக ஒரு காலத்தில் இருந்து வந்தவர்தான் ஸ்ரீவித்யா. கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 70க்களில் நடிக்க ஆரம்பத்த இவர் 2000ம் கால கட்டம் வரை தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்.

இதனிடையே அவர் முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயின் தாக்கம் அதிகமானதால் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி மரணமடைந்தார். நடிகை ஸ்ரீவித்யா மலையாளம் , தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதுவரை 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சிறந்த நடிகை ,சிறந்த டான்ஸர் , சிறந்த பாடகி என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி காட்டியுள்ளார்.

திரைப்படத்துறையில் நடிகையாக வளர்ந்து வந்த சமயத்தில் ஸ்ரீவித்யா நடிகர் கமல்ஹாசனை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். கமல்ஹாசனுக்கு ஜோடியாக “அபூர்வராகங்கள்” படத்தில் நடித்த போது தன்னைவிட வயதில் சிறியவரான கமல்ஹாசனை காதலிக்க துவங்கிய ஸ்ரீவித்யா இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் பின்னர் இவர்களது காதல் நிறைவேறாமல் முறிந்து போனது.

அதற்கு முக்கிய காரணமே ஸ்ரீவித்யாவின் அம்மா தான். இது குறித்து பேட்டியில் கூறிய ஸ்ரீ வித்யா, “நானும் கமல் ஹாசனும் காதலித்து வந்தோம். அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரகசியமெல்லாம் கிடையாது.

திரைத்துறையில் எல்லோருக்குமே இந்த விஷயம் தெரியும். கமலுடைய தந்தையாருக்கு என் மீது அதிக அன்பு இருந்தது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரும் விரும்பி இருந்தார். ஆனால் என்னுடைய அம்மா தான் சில வருடங்கள் காத்திருக்கும் படி கூறினார்.

மேலும் கமலஹாசனை சந்தித்து இது குறித்து பேசிய என்னுடைய அம்மா, இப்போது. ஸ்ரீவித்யாவுக்கு 21 வயது தான் ஆகிறது. கமல் மகா நடிகனாக வேண்டும். அதேபோல் ஸ்ரீவித்யாவும் சினிமா துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொட வேண்டும்.

நீங்கள் இருவருமே சினிமா துறையில் போக வேண்டிய உயரமும் தூரமும் அதிகம் இருக்கிறது. அப்படி நீங்கள் பெரிய நட்சத்திரங்கள் ஆனது பிறகும் உங்களுக்குள் காதல் உண்மையாகவே இருந்தால் நீங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளலாம் என கமல்ஹாசனிடம் ஸ்ரீதிவ்யாவின் அம்மா கூறியிருக்கிறார்.

அம்மாவின் பேச்சை தட்டாத ஸ்ரீவித்யாவும் கமலிடம் அப்படியே கூற கமல் மிகவும் கோபமாகி ஸ்ரீவித்யாவை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதை அடுத்து கமல்ஹாசன் வாணி கணபதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஸ்ரீவித்யா மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி பல நாட்கள் அதை எண்ணி எண்ணி அழுது தூங்காமல் இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் நான் அந்த பெண்ணை விட அப்படி எந்த விதத்தில் குறைந்தேன்?

அந்த பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறது? என்றெல்லாம் நினைத்து வருத்தப்பட்டாராம். அந்த சமயத்தில் தான் எதையுமே யோசிக்காமல் நான் உன்னை விரும்புகிறேன் என ஸ்ரீவித்யாவிடம் கூறிய மலையாள தயாரிப்பாளரான ஜார்ஜ் என்பவரை எந்த யோசனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணமும் தோல்வி அடைந்து விட்டது. திருமண வாழ்க்கையிலும் கணவரால் ஏமாற்றப்பட்ட ஸ்ரீவித்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். அதன் பின் அவர் புற்றுநோயால் தாக்கப்பட்டு. சிகிச்சை பலன் இன்றி 2006 ஆம் ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.