விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிறைவடைந்ததில் அசிம் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை விக்ரமனும் பிடித்திருந்தனர்.
இந்தநிலையில், இறுதிப் போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளத்தில் பெரும் கேள்விக்கு உள்ளாகி இருந்தது. பிக் பாஸ் சீசன் 4-ல் நடிகர் கமல் அடிக்கடி கதர் ஆடைகளை உடுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வப்போது போட்டியாளர்களிடன் கூட இது கதறினாள் செய்யப்பட்ட ஆடை என்று சுட்டிக்காட்டி கொண்டே இருப்பார்.
இப்படி ஒரு நிலையில் முன்னதாக நடிகர் கமல் ‘House Of Khaddar’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து போட்டியாளர்களும் கதர் ஆடைகளை அளித்து அதனை அணிந்து வரவும் செய்தார்.
மேலும், நெசவுத் தொழிலாளர்கள் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட செய்ய இனி முடிந்த அளவிற்கு கதர் ஆடைகளை பயன்படுத்த போவதாக கமல் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், இந்த சீசனில் தான் கமலின் ஆடைகளை அடிக்கடி கேலிக்கு உள்ளாகி இருந்தது. அதிலும் குறிப்பாக இறுதி போட்டியில் கமல் அணிந்து வந்த ஆடை பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது.
அந்த ஆடையில் வெள்ளை பெயிண்ட் ஊற்றியது போல இருந்ததால் நெட்டிசன்கள் பலரும் கமலின் இந்த ஆடையை சமூக வலைதளத்தில் கேலி செய்து வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் கமலின் இந்த ஆடையை வடிவமைத்த அமிர்தா, இந்த குறிப்பிட்ட ஆடை குறித்து பேசி இருக்கிறார். அதில் ‘இறுதிப்போட்டி என்பதால், கமல் சார் ஆடையை சிறப்பாக வடிவமைக்கத் திட்டமிட்டோம் என்றும், இந்தமுறை ‘நான் டெனிம் போடுறேன் என்று அவர் கூறியதாகவும், ஜாக்கெட் மாதிரியான ஆடை வேண்டும்’ என்றதாகவும், அதனால் தான், கதர் டெனிமிலேயே ஜாக்கெட்டை வடிவமைத்தேன்’ எம்பிராய்டரி உட்பட அனைத்தையும் கையால் தான் வடிவமைத்தேன் என்றும், ஆடையை வடிவமைத்த பின்னர் கலை இயக்குனர் ஜாக்சனிடம் ஆடையில் பெயிண்ட் செய்ய கொடுத்தேன் என தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து கலை இயக்குனர் ஜாக்சன் வடசென்னை அசுரன் போன்ற படத்திற்கு எல்லாம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் என்றும், வட சென்னை படத்தில் நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது ஜாக்சன் எனக்கு நண்பரானார் என்றும், நான் பெயிண்ட் செய்ய கொடுத்ததும் இரண்டே நாட்களில் ஆடைக்கு பெயிண்ட் செய்து கொடுத்துவிட்டார் என தெரிவித்தார்.
மேலும், அவர் இந்த ஆடையை பார்த்ததும் கமல் சாரே ‘குட் ஜாப் என்று பாராட்டினார்’ அதுவே எங்களுக்கு போதும் என்றும், சமூக வலைதளத்தில் இந்த ஆடையை பலரும் கேலி செய்வதை பற்றி கவலைப்பட எனக்கு நேரம் கிடையாது எனவும், இது எல்லாமே ஒரு கலை தான், அதை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும், இந்த ஆடையை யாராவது திரும்ப பண்ணச் சொல்லுங்கள் பார்ப்போம், மிகவும் கடினம் பெயிண்டை ஆடை மீது ஊட்ரினால் அது எல்லா இடத்திலும் பட்டுவிடும் அதை எப்படி செய்கிறோம் என்பது தான் கலை’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.