நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிக்பாஸ் ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
‘கனத்த இதயத்துடன், நான் ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய பயணத்தில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன். பல திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால், என்னால் இந்த வருடம் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை. எனக்கு உங்கள் வீடுகளிலிருந்து தரும் அன்பிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்திய அளவில் சிறந்த ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக விளங்குகிறது.
உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்குப் பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் என்றென்றும் நன்றி இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை.
தனிப்பட்ட முறையில், உங்கள் புரவலராக இருப்பது ஒரு வளமான சங்கமாக இருந்து வருகிறது, அங்கு நான் எனது கற்றலை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன். இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நாங்கள் ஒன்றாக நேரம் செலவழித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தில் முழுவீச்சில் நடிக்க. முடிவெடுத்திருக்கிறாராம். ஆம், மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் ஏற்கனவே பல காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருந்தது.
குறிப்பாக கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தேர்தல் பிரச்சாரங்களில் படு பிஸியாக இருந்து வந்த சமயத்தால் இந்த படம் ஏற்கனவே தாமதமானது. இதனால் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் தக் லைஃப் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்ற காரணத்தால் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.