சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தற்போது திரைப்பட விநியோகத்திலேயே ஒரு தலைகீழ் மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளாராம் கமல்ஹாசன்.
அதாவது ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்களிலேயே அத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவிடும். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதாவது 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடுவதால் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துப்போனதாக திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கண்ணீர் வடித்தனர். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தற்போது ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளாராம்.
அதாவது தான் தயாரித்து நடித்த “தக் லைஃப்” திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனத்தாரிடம் கமல்ஹாசன் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கும் ஓடிடியில் வெளியாவதற்கும் இடையே 8 வாரங்கள் இடைவெளி இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனை பின்பற்றி பின்னாளில் இதனை பல தயாரிப்பாளர்களும் கடைபிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.