தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது கதை திருட்டு.
ஒரு படத்தின் கதை மற்றொரு படத்தின் கதை கருவையோ, அல்லது கதையின் சாயலையோ கொண்டிருக்கும்போது அந்த கதையின் படைப்பாளர் இது தன்னுடைய கதை என உரிமை கோருவது உண்டு. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீதும் கதை திருட்டு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவர் மகன் கதைக்கு முண்டியடித்து பெயர் போட்டுக் கொள்ளும் கமல் ஹாசன் இந்த கதையை எழுத வில்லையாம்.
ஏனென்றால் தேவர் மகன் படத்திற்கு முன்னர் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் தோல்வி அடைந்ததால் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கங்கை அமரனிடம் கதை கேட்டு அந்த கதை தான் தேவர் மகன் எனவும் அதற்கு முதலில் அதிவீரபாண்டியன் என பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்க்கான கதை கதையாசிரியர் கலைஞானத்தினுடையது எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கமல்ஹாசனின் மனைவியை காதலித்த பிரபல நடிகர் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!
இப்படத்திற்கு கமல்ஹாசன் அதிக பணம் தருவதாக கூறி வெறும் 25 ஆயிரம் மட்டும் தனக்கு கொடுத்ததாக ஒரு பேட்டியில் கலைஞானம் தெரிவித்திருப்பார். இந்திய சினிமாவின் பெரும் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருந்த தேவர் மகன் திரைப்படம் ஒரு திருடப்பட்ட கதை என்பது மோசமான செயலாக கருதப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.