மட்டமான ஆளு.. படத்தில் நடிக்கும் நடிகைகளை மனைவியாக்கிவிடுவார்.. பாலு மகேந்திரா குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்..!
Author: Vignesh29 May 2024, 11:07 am
சினிமா பெயரில் பல சாதனைகளை படைத்த பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலாகவே இருந்தது. மூன்று திருமணங்களை செய்தார். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த உறவில் இருந்தபோதே நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் படிக்க: விவாகரத்து செய்ய முடிவா?.. ரவீந்தரின் சோகமான பதிவால் கேள்வி எழும்பிய நெட்டிசன்கள்..!
இவர் பாலு மகேந்திரா மீதும் சினிமா மீதும் காதல் வயப்பட்டதால் 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு இவர்கள் திடீரென பிரிந்து அதிர்ச்சியை கொடுத்தனர். இதனை அடுத்து இவர்கள் பிரிந்த நிலையில் சில வருடங்களில் பாலு மகேந்திரா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், முன்னதாக தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி இயக்குனர்களாக வளம் வருகிற வெற்றிமாறன், பாலா போன்றவர்கள் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள். தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு தனி அடையாளத்தை விட்டு சென்றுள்ளார் பாலு மகேந்திரா. சக்தி என்பவரை தத்து எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்தார்.
மேலும் படிக்க: நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!
இந்நிலையில், தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிகர்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ரகசியங்களை பத்திரிகைகளில் மற்றும் youtube சேனல்களுக்கு பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தற்போது, பாலு மகேந்திரா குறித்து சில அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாலு மகேந்திராவை விட மோசமான பெண் பித்தர் யாரும் இருக்க மாட்டார். பாலு மகேந்திரா ஒரு மட்டமான ஆளு, இவரோடு நடிக்கும் நடிகைகள் திரைப்படம் முடிவதற்குள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தி தன் மனைவியாக்கிக் கொள்வார். இதற்கு உதாரணமாக ஷோபா, மோனிகா மற்றும் 23 வயது பெண்ணை வீட்டில் இருந்து பிரித்து அவருடன் குடும்பம் நடத்தினார். மோனிகாவுடன் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து திருமணம் செய்யாமல் வாழ்ந்துவிட்டார்.
ஷோபாவை திருமணம் செய்து கொள்ளாமல் மனைவி அல்லாமல் வேறொருவருடன் குடும்பம் நடத்துகிறார் என்று தெரிந்து தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை செய்து கொண்டு இறந்த ஷோபாவின் மரணத்திற்கு காரணமான இருந்த பாலு மகேந்திராவை எம்ஜிஆர் காப்பாற்றுகிறார். பாலு மகேந்திரா எப்படி ஒரு சைக்கோ அதேபோலத்தான் அவரது உதவி இயக்குனர் பாலாவும் ஒரு சைக்கோ. பாலாவிடம் அடிவாங்காத நடிகர் நடிகைகளே இல்லை.
மேலும் படிக்க: விவாகரத்து செய்ய முடிவா?.. ரவீந்தரின் சோகமான பதிவால் கேள்வி எழும்பிய நெட்டிசன்கள்..!
பாலு மகேந்திராவிடம் இருந்து நடிகை ஸ்ரீதேவியை காப்பாற்ற கமலஹாசனுக்கு போதும் போதும் என்றாகி விட்டதாம். அவர் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று ஸ்ரீதேவியும் கூறியும் பாலு மகேந்திரா வற்புறுத்தி நடிக்க வைத்தார். பலமுறை அவரிடம் இருந்து ஸ்ரீதேவியை காப்பாற்ற கமல் போராடியுள்ளார்.
ஸ்ரீதேவி, சில்க், சுகாசினி, ஷோபா, மோனிகா, ரெஸினா, ரேவதி போன்ற பெண்கள் ஒரு படத்தில் நடித்து அதன் பின் அவருடன் நடிக்காமல் போனார்கள். அதற்கு காரணம், பாலியல் ரீதியான பயம் தான். தங்களின் பெண்மையை காப்பாற்றிக்கொள்ள படாதபாடு பட்டியிருக்கிறார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார்.